காமராஜர் பிறந்தநாள் கவிதைதரணி கண்ட தங்க தலைவா
தமிழ்நாட்டின் பொற்காலம் தந்த தலைவா
தென்னாட்டுகாந்தியாக திகழ்ந்த தலைவா
தேசம் காக்க வந்த தலைவா
கல்வி கண் திறந்த தலைவா
கரைப்படியாத கரம் கொண்ட தலைவா
மக்கள் போற்றும் தலைவா
மதிய உணவு கொண்டு வந்த தலைவா
மண்ணில் கண்ட மக்கள் தலைவா மாணவர்களின் மாண்புமிகு தலைவா காந்திய வழி வாழ்ந்த காந்திய தலைவா கருப்பு தங்கமாய் ஒளி தந்த தலைவா அணைகளின் நாயகனை ஆண்ட தலைவா
அனுதினமும் நினைவில் வாழும் தலைவா
கல்லாமையை இல்லாமை ஆக்கிய கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் ஜிலை15

Comments
Post a Comment